அல்லாஹ்வின் தூதர் முஹம்மது (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள் :
“எவர் ரமலான் மாதம் முழுவதும் நோன்பிருந்து அதன் தொடர்ச்சியாக ஷவ்வால் மாதத்தில் ஆறு நோன்புகளை நோற்கிறாரோ, அவர் வருடம் முழுவதும் நோன்பு நோற்றவராவார்.”
— முஸ்லிம்
நபித்தோழர் அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிப்பதாவது:
“ஒவ்வொரு மாதமும் மூன்று நாட்கள் நோன்பு நோற்பது, இரண்டு ரகஅத் ளுஹா தொழுவது மற்றும் தூங்கச்செல்லும் முன் வித்ருத் தொழுவது என்ற மூன்று விஷயங்களை எனது நேசராகிய நபி(ஸல்) அவர்கள் எனக்கு வஸிய்யத் செய்தார்கள்.”
— புகாரி
ஒவ்வொரு மாதமும் மூன்று நோன்பு வைப்பது முஸ்தஹப்பாகும்.
ஹஜ்ரத் அபூதர்தா (ரலி) அவர்கள் அறிவிப்பதாவது:
“எனக்கு மூன்று விஷயங்களை எனது நேசர் உபதேசம் செய்தார்கள். நான் மரணிக்கும்வரை அதை கைவிடவேமாட்டேன். ஒவ்வொரு மாதமும் மூன்று நோன்பு நோற்பது, ளுஹா தொழுவது, வித்ரு தொழாதவரை தூங்காமலிருப்பது.”
— முஸ்லிம்
ஒவ்வொரு மாதமும் பிறை 13, 14, 15 ஆகிய மூன்று தினங்கள் நோன்பு நோற்பது முஸ்தஹப்பு.
நபிலான நோன்பு வைக்கும் முன் கணவனின் அனுமதியை, மனைவி கட்டாயம் பெறவேண்டும்.
இந்த மூன்று நோன்புகளுக்குத்தான் “அய்யாமுல் பீழ்” நோன்பு என்று அழைக்கப்படும்.
